Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/புத்தர்/அனைவரையும் நேசியுங்கள்

அனைவரையும் நேசியுங்கள்

அனைவரையும் நேசியுங்கள்

அனைவரையும் நேசியுங்கள்

ADDED : ஆக 10, 2011 10:08 AM


Google News
Latest Tamil News
* பிறரது குறை, நிறைகளை கவனிக்காமல், நாம் செய்யும் நல்வினை, தீவினைகளில் உள்ள குறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

* நல்ல குணமுள்ளவர்கள் எதிலும் பற்று கொள்வதில்லை. இன்பங்களை விரும்பி இரைச்சல் போடுவது இல்லை. சுகமோ, துக்கமோ எது ஏற்பட்டாலும் எழுச்சியடைவதும் இல்லை, சோர்வு கொள்வதும் இல்லை.

* பூமிக்கு ஒப்பான பொறுமையும், வாசல் தூண் போன்ற உறுதியும் சேறில்லாத குளத்து நீர் போன்ற தூய்மையும் யாரிடம் இருக்கிறதோ, அவன் பிறப்பு, இறப்பு எனும் சுழலில் சிக்கிக் கொள்வதில்லை.

* கடலில் வந்து கலக்கும் ஆறுகள் தங்கள் தனிப்பட்ட தன்மையை இழந்து, மகாசமுத்திரம் என்ற பெயரில் வழங்கப்படுவது போல், எல்லா ஜாதியினரும் தங்கள் வம்சாவளியை துறந்து ஒற்றுமையாய் இருந்தால் சகோதரர் ஆகிவிடுவார்கள்.

* அனைவரையும் நேசியுங்கள். எப்போதும் அவர்களுடன் சேர்ந்து வாழ்வதால் வாழ்க்கையில் சந்தோஷத்தை பெறுவீர்கள்.

- புத்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us